Published : 02 Nov 2022 06:01 AM
Last Updated : 02 Nov 2022 06:01 AM

நவ.02: இன்று என்ன? - திராவிட சாஸ்திரி

தமிழ் நாடக பேராசிரியர், தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர், நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வு நூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியவர். மதுரை விளாச்சேரியில் பிறந்தவர். தமிழ் மொழி மீது கொண்ட தீரா காதலால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது இயற்பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர். இவரது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறனைக் கண்டு “திராவிட சாஸ்திரி” பட்டத்தை பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரனார் வழங்கினார். இவர் குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் 1903-ல் நவம்பர் 2-ம் தேதி காலமானார். 2007-ல் இந்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x