Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM
தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளுக்கு கொண்டைக் கடலை வழங்கும் பணி தொடங்கியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிஹெச்ஹெச் மற்றும் ஏஏஒய் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் துவரம் பருப்புக்கு பதிலாக 5 கிலோ விலையில்லா கொண்டைக் கடலையும், என்பிஹெச்ஹெச் அட்டை தாரர்களுக்கு அத்தியா வசிய பொருட்களுடன் 1 கிலோ விலை யில்லா துவரம் பருப்பும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு தகுதி யான அளவின்படி அனைத்து பொருட்களும் முழு அளவில் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஒரே தவணையில் கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். பொதுவிநியோகத் திட்ட பொருட்களை வாங்க வருவோர் அவசியம் முகக் கவசம் அணிந்தும், நபருக்கு நபர் 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT