Published : 20 May 2024 12:19 PM
Last Updated : 20 May 2024 12:19 PM

மக்கள் ஆதரவுடன் ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராவார்: திருவண்ணாமலையில் ரோஜா பேட்டி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என அம் மாநில அமைச்சர் நடிகை ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தோடு பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னேறிச் செல்கிறேன். கிரிவலத்தை முடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அண்ணாமலையாரின் அருள் எனக்கு இருக்க வேண்டும், மக்களை நேசிக்கும் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வராக வரவேண்டும், நானும் மூன்றாவது முறையாக எம்எல்ஏ-வாக வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டேன்.

பாஜக தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறார். ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது விசாரணை அமைப்பது என அதிகாரிகளுக்கு அதிக அளவில் மன உளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி கொடுத்து வருகிறது.

ஆனால், ஆந்திர மக்கள் தெளிவாக உள்ளனர். தங்களுக்காக பாடுபட்டவர்கள் யார், நல்லது செய்தவர்கள் யார் என அவர்கள் அறிந்து உள்ளனர். அதனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவரும் மக்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x