Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸார் இரவில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் உப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றிப் பார்த்தபோது, லாரியின் அடிப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. 13 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT