Published : 26 Jul 2022 03:15 PM
Last Updated : 26 Jul 2022 03:15 PM
சென்னை: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள திரவுபதி முர்முவுக்கு அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரவுபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள். மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரவுபதி” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள @DMurmuPresident அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள்.
நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள்
மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம்.
ஏமாறக் கூடாது
நவ திரௌபதி. pic.twitter.com/tRSYl0BOcE— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 25, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT