Published : 06 Apr 2024 10:03 AM
Last Updated : 06 Apr 2024 10:03 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கூடுதல் ரயில் சேவை 6 நாட்களுக்கு இயக்கம்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே 6 நாட்களுக்கு கூடுதல் பயணிகள் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காக, சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே கூடுதல் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, வரும் 8, 23, 28 மற்றும் மே 1, 24 , 26 ஆகிய தேதிகளில் இந்த மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.40, 11.05மணிக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 11.20, 11.45 மணிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x