Published : 14 Jun 2023 09:20 AM
Last Updated : 14 Jun 2023 09:20 AM

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது மனித உரிமை மீறல்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது ஒரு மனித உரிமை மீறல் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறியதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. அப்போது அவர், "அதமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத் துறை நடவடிக்கை மனித உரிமை மீறல். அவர்களின் செயல்பாடு ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.

எப்படி இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி? அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று நள்ளிரவு கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும் அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அது தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இசிஜி-யில் மாறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது.தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் செந்தில்பாலாஜியின் உடல்நிலை ரயில்வே மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையை சுற்றி சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x