Published : 28 Dec 2023 06:15 AM
Last Updated : 28 Dec 2023 06:15 AM

அண்ணாநகர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பெண்களுக்கு சலுகை கட்டணத்தில் குரூப்-4 பயிற்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வை எழுதும் பெண் தேர்வர்களுக்கு சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் கட்டணச் சலுகையுடனான 6 மாத பயிற்சி டிச.31-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து ஆர்வம் ஐஏஎஸ்அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் வருவாய்த் துறை, வணிகவரித் துறை, ஊரக வளர்ச்சித் துறைஉள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர்களுக்கான குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வுக்கு தயாராகும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் தேர்வர்களுக்கு பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு உள்ளடங்கிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ், ஆங்கிலத்தில் பாடக்குறிப்புகள் வழங்கப்படும். பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும்.

வெற்றியாளர்கள், துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 6 மாதங்களுக்கு நடைபெறும். பெண் தேர்வர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகவரி, தக்க சான்றிதழ்களுடன் நேரில் வந்து டிச.30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x