Published : 28 Dec 2023 05:30 AM
Last Updated : 28 Dec 2023 05:30 AM

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிச. 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்று (டிச. 28) தமிழக கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 29, 30-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங் களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 31-ம் தேதி முதல் ஜன. 2-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30, 31-ம்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில்லேசான மழை பெய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x