Published : 24 Sep 2022 09:10 PM
Last Updated : 24 Sep 2022 09:10 PM

தமிழகத்தில் புதிதாக 533 பேருக்கு கரோனா பாதிப்பு; 2 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 274, பெண்கள் 259 என மொத்தம் 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 116 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 79,901 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 36,506 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 479 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தோர் விவரம்: 68 வயதான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், 87 வயதான சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரும் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 529 ஆகவும், சென்னையில் 111 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சிறிய அளவில் ஏற்றம் கண்டு வருவதை கவனிக்க முடிகிறது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 4,912 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 44,436 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5,719 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 217.41 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x