Published : 23 Sep 2022 08:46 PM
Last Updated : 23 Sep 2022 08:46 PM

தமிழகத்தில் புதிதாக 529 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 265, பெண்கள் 264 என மொத்தம் 529 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 79,368 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 36,027 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 463 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,297 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 522 ஆகவும், சென்னையில் 110 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சிறிய அளவில் ஏற்றம் கண்டு வருவதை கவனிக்க முடிகிறது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,383 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45,281 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6,424 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 217.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x