Published : 20 Sep 2022 09:22 PM
Last Updated : 20 Sep 2022 09:22 PM

தமிழகத்தில் புதிதாக 496 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு.

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 287, பெண்கள் 209 என மொத்தம் 496 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 102 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 77,808 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 34,698 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 421 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 498 ஆகவும், சென்னையில் 106 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொற்று பரவல் சற்று ஏறி பின்னர் இறக்கம் கண்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 4,043 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 47,379 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4,676 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 216.83 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x