Last Updated : 01 Sep, 2015 02:24 PM

 

Published : 01 Sep 2015 02:24 PM
Last Updated : 01 Sep 2015 02:24 PM

இராக்கில் 4 ஷியா போராளிகளை உயிருடன் எரித்தது ஐ.எஸ்.

இராக்கில் 4 ஷியாப் பிரிவு போராளிகளை உயிருடன் தலைகீழாகக் கட்டி வைத்து எரித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராக் அரசுப் படைக்கு ஆதரவானவர்கள் தங்களது அமைப்பைச் சேர்ந்த சிலரை எரித்துக் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் விதத்தில் போராளிகளைக் கொன்றதாகவும் அந்த வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த வீடியோக் காட்சியில், போராளிகள் இரும்பு சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டபடி அவர்களை தீவிரவாதிகள் தீயிட்டு எரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இராக் மற்றும் சிரியாவின் சிலப் பகுதிகளை தங்களது வசம் கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கான தனி நாட்டை ஆளப்போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசுக்கு ஷியாப் பிரிவு மக்களுக்கு எதிரான அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x