Published : 20 May 2020 07:17 AM
Last Updated : 20 May 2020 07:17 AM

பாலஸ்தீன அகதிகள் மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.15 கோடி நிதியுதவி

ரமலா

பாலஸ்தீனத்தில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின்கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு உதவுவதற்காக 2 மில்லியன்அமெரிக்க டாலரை, அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.15கோடியே 12 லட்சம் ரூபாயை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளது.

பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. நிவாரண பணிகள் நிறுவனத்திடம் இந்த தொகையை இந்திய பிரதிநிதி சுனில் குமார் வழங்கினார்.

இதுகுறித்து ஐ.நா. நிவாரண பணிகள் நிறுவனத்தின் நன்கொடையாளர் தொடர்புத் துறை தலைவர் மர்க் லஸ்ஸாய் கூறுகையில், ‘‘பாலஸ்தீன அகதிகள் நிவாரண நிதிக்கு இந்தியா வழங்கியிருக்கும் ஒரு பகுதி நன்கொடைக்கு ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஐ.நா. நிறுவனம் எதிர்கொள்ளும் நிதி சவால்களை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x