Last Updated : 29 Aug, 2015 02:39 PM

 

Published : 29 Aug 2015 02:39 PM
Last Updated : 29 Aug 2015 02:39 PM

ஆப்கானில் தாலிபான் தாக்குதலில் 8 போலீஸ் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸார் கொல்லப்பட்டனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கான்ஸி மாகாணத்தில் நேற்று இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சோதனைச் சாவடியில் போலீஸார் பணியில் இருந்தபோது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவீசினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 17 பேர் காயமடைந்ததாக ஆப்கான் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தாக்குதல் நடத்தியத்து தாங்கள் தான் என்று ஆப்கான் தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x