Published : 02 Apr 2015 11:13 AM
Last Updated : 02 Apr 2015 11:13 AM
இருளில் பார்க்க உதவும் கண் சொட்டு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சொட்டு மருந்தை கண்களில் விட்டுக்கொண்டால், இருளில் 50 மீட்டர் தூரம் வரை கண்பார்வை நன்றாகத் தெரியும்.
கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர். மனிதர்களுக்கு இம்மருந்தைக் கொடுத்து, நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் உள்ள ஒருவகை மீனில் கிடைக்கும் குளோரோபில் வகையான குளோரின் இ6 என்ற மருந்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். மாலைக் கண் நோயைக் குணமாக்குவதற்கு இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ அலுவலர் ஜெப்ரி டிப்பெட்ஸ், கேப்ரியல் லிசினா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இதனைக் கண்டறிந்துள்ளனர்.
மிகக் குறைந்த வீரியத்தில் இம்மருந்தைக் கண்களில் செலுத்தும்போது, அது விழித்திரையைச் சென்றடைந்து தற்காலிகமாக இருளிலும் பார்க்கும் திறனைக் கண்களுக்குக் கொடுக்கிறது. காரிருளில் 50 மீட்டர் தூரம் வரை உள்ள பொருட்களைப் பார்க்க இம்மருந்து உதவுகிறது.
மேலும் பலகட்டப் பரிசோதனை களை மேற்கொள்ள இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT