Published : 13 Oct 2023 05:16 AM
Last Updated : 13 Oct 2023 05:16 AM

ஹமாஸை முற்றிலும் ஒழிப்போம்: நெதன்யாகு உறுதி

நெதன்யாகு

ஹமாஸ் தீவிரவாதிகள் அனைவரையும் கூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபூண்டுள்ளார். ஹமாஸ் தீவிரவாதி ஒவ்வொருவரும், இறந்த மனிதன் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலில் போர் பயிற்சி பெற்ற 3,60,000 பேர் காசா அருகே வரவழைக்கப்பட்டுள்ளனர். காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவம் களம் இறங்கியுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்: இஸ்ரேல் ராணுவத்தினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என சுமார் 150 பேரை பிணைக் கைதிகளாக வைத்து, இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x