Published : 13 Oct 2023 04:59 AM
Last Updated : 13 Oct 2023 04:59 AM

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க எகிப்து மறுப்பு

கோப்புப்படம்

காசா பகுதியில் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். வான் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 3,39,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஐ.நா பள்ளிகளுக்கு வந்துள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

வான் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறும் மக்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்கும்படி எகிப்து அரசிடம் அமெரிக்கா கூறியது. ஆனால், இந்த கோரிக்கையை எகிப்து நிராகரித்துவிட்டது. காசா பகுதியை விட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேறினால், அது இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிடும் என எகிப்து கருதுகிறது. காசா பகுதிக்குள் பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் எகிப்து கூறி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x