Published : 13 Oct 2023 12:50 AM
Last Updated : 13 Oct 2023 12:50 AM

கடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல்.

தனியார் ரசாயன தொழிற்சாலையின் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அதிலிருந்து வெளியேறிய புகையினால் அப்பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது. துர்நாற்றம் வீசும் நிலையில் கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வேளாண் உற்பத்தி சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 90 நாடுகளில் வணிக ரீதியாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x