Published : 28 Dec 2023 06:23 AM
Last Updated : 28 Dec 2023 06:23 AM

அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல் பாம்பார் அருவியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானல்: அரையாண்டு விடுமுறையை யொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் பாரஸ்ட் , குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் சென்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. பகலில் இதமான தட்பவெப்ப நிலையும், பிற்பகலுக்கு பின் பனிப்பொழிவும் காணப்பட்டது. இரவில் வாட்டி வதைக்கும் குளிர் நிலவுகிறது. அடுத்து ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x