Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த தேசிய கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் முறையற்ற வணிக நடைமுறை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் பேராசிரியை ஆர்.எஸ்.தங்கேஸ்வரி வரவேற்றார்.
இந்திய நுகர்வோர் சம்மேளன தேசிய செயலாளர் எம்.செல்வராஜ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய ஆற்றல், மின் சேமிப்பு, மின் சிக்கனம் பற்றி பேசினார். திருநெல்வேலி மாவட்ட பெட்காட் செயலாளர் மற்றும் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கோ.கணபதி சுப்பிரமணியன் முறையற்ற வணிக நடைமுறை, தர முத்திரைகள், சிக்கனம் சேமிப்பு, உணவு கலப்படம், கெட்டிக்கார நுகர்வோர்களின் பண்புகள், குறைதீர் மன்றங்கள் பற்றி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT