Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

கேபிள் டிவி ஆப்பரேட்டர் கொலையில் : ரவுடி உட்பட 5 பேரை தேடும் தனிப்படை :

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் கேபிள் டிவி ஆப்பரேட்டர் ராஜா(30). நேற்று முன்தினம் மேலூரில் அவரது அலுவலகத்தில் இருந்தார். அப்போது, மேலூர் அருகேயுள்ள நாகப்பன்பட்டியைச் சேர்ந்த ரகுநாதன்(30) என்பவர், தனது காரை ராஜாவின் அலுவலகத்தின் முன்பு நிறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரகுநாதனின் கூட்டாளிகள் 5 பேர் அங்கு வந்து இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜாவை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை, மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ரகுநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். ரகுநாதனின் பெயர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x