Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

மதுரையில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உரக் கட்டுப்பாட்டு ஆய்வக கட்டிடம் :

மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் தல்லாகுளத்தில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்பட்டு வந்தது. கட்டிடங்கள் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, கடந்தாண்டு ஜூலை மாதம் வேளாண் பொறியியல் துறை சார்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கரோனா ஊரடங்கால் பணிகள் தாமதமானது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது கட்டுமானப்பணிகள் முடிந்து வண்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x