Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM
புதுடெல்லி: கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.51 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 12,408 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,08,02,591 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,04,96,308 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,51,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,54,823 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 2,736 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 36,113 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 5,610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 67,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 474 பேர், ஆந்திராவில் 79 பேர், டெல்லியில் 158 பேர், உத்தர பிரதேசத்தில் 133 பேர், மேற்கு வங்கத்தில் 206 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT