Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

உ.பி.யில் பத்திரிகையாளரை எரித்துக் கொன்றகிராம தலைவர் மகன் உட்பட 3 பேர் கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங் நிர்பிக் (37), ஒரு இந்தி பத்திரிகையில் பணியாற்றி வந்தார். நிர்பிக் நண்பர் பிந்து சாகுவுடன் (34) தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த வாரம் இருவரும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோதும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, நிர்பிக் உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறும்போது, “எங்கள் கிராம தலைவர் மற்றும் அவரது மகன் ரிங்கு மிஸ்ராவின் ஊழல் குறித்து பத்திரிகையில் எழுதி வந்தோம். உண்மையை எழுதியதற்கு கிடைத்த பரிசுதான் இது” என கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீஸார் ரிங்கு மிஸ்ரா உட்பட 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரிங்கு மிஸ்ரா தனது 2 நண்பர்களுடன் இணைந்து கிருமி நாசினியை ஊற்றி இருவரையும் எரித்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x