Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் 3,367 பேருக்கு தொற்று :

தமிழகத்தில் புதிதாக 3,367 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 64 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,950, பெண்கள் 1,417 என மொத்தம் 3,367 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 385, ஈரோட்டில் 288, சேலத்தில் 214, தஞ்சாவூரில் 198, திருப்பூரில் 197, சென்னையில் 196 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 6,848ஆக அதிகரித்துள்ளது. தமிழகம்முழுவதும் 34,076 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

64 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,196 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x