Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

சிதம்பரம், நாகூர் தர்கா குளங்களின் சுவர்கள் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் சேதமடைந்த சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தின் சுவர்கள் தமிழக அரசால் ரூ.7.99 கோடியில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் கனமழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் சிதம்பரத்துக்கு ஆய்வு செய்ய சென்றபோது, இந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் ரூ.2.62 கோடியில் சீரமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவர் வெள்ளத்தால் சேதமடைந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நான் ஆய்வுக்கு சென்றபோது, இஸ்லாமிய மக்கள் இந்த தடுப்புச் சுவரை சீரமைத்து தருமாறு கோரினர். அதை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்குபுற தடுப்புச் சுவரும் ரூ.5.37 கோடியில்சீரமைத்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x