Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர்,நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி,காரைக்கால் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x