Published : 31 Dec 2022 06:41 AM
Last Updated : 31 Dec 2022 06:41 AM

நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய தலைமை செயலர்

சென்னை நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் தலைமைச் செயலர் வெ.இறையன்பு.

சென்னை

மெரினாவில் விபத்தில் சிக்கிய நபரை, தலைமைச் செயலர் இறையன்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் குமரசேன்(34). இவர் நேற்று காலை காமராஜர் சாலை வழியாக பூக்கடை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

நேப்பியர் பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ, குமரேசனின் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் குமரேசன் காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் சாலையிலேயே அவர் தவித்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த தலைமைச் செயலர் வெ.இறையன்பு தனது காரை நிறுத்தி, கீழே இறங்கினார். உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த குமரேசனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x