Published : 07 Jul 2016 11:15 AM
Last Updated : 07 Jul 2016 11:15 AM

திருப்பூரில் பிடிபட்டது ரூ.5 ஆயிரம் கோடியா?- மு.க.ஸ்டாலின் சந்தேகம்

திருப்பூரில் பிடிபட்டது ரூ.5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று ஸ்டாலின் பேசும்போது, தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், யாரோ ஒருவருக்குச் சொந்தமான பணம் ஆந்திராவுக்கு கடத்திச் செல்லும் வழியில் திருப்பூர் அருகே கோடிக்கணக்கில் பிடிபட்டுள்ளது. அது ரூ.5 ஆயிரம் கோடியாகக்கூட இருக்கலாம். தற்போது, இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ளதால், அந்தப் பணம் யாருடையது என்பது 3 மாதங்களில் தெரிந்துவிடும். திமுகவை அழிப்பதாகக் கூறி புறப்பட்ட சிலர், இந்தத் தேர்தலில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

பட்டுக்கோட்டை திமுக நிர்வாகி தங்க.மனோகரன் கொலையை அடுத்து, தஞ்சையில் நேற்று ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்த, கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

நிர்வாகி குடும்பத்தினருக்கு இரங்கல்

முன்னதாக பட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி தங்க மனோரகரனின் வீட்டுக்கு நேற்று சென்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x