Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

தகுதித் தேர்வு மூலம் நர்ஸ் வேலை- செவிலியர் சங்கம் கோரிக்கை

அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு தகுதித்தேர்வு மூலம் வேலை அளிக்க வேண்டும் என்று அகில இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தனியார் கல்லூரியில் பயிலும் செவிலியர் மாணவர்கள் சார்பில் அகில இந்திய பயிற்சிபெற்ற செவிலியர் சங்க துணைத்தலைவி எஸ்.விஜயலட்சுமி, நர்சிங் மாணவர்களின் ஆலோசகர் ஜெயசீலன் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

அரசு நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் போலவே தனியார் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ‘தியரி’ மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு தவிர, இந்தியா முழுவதும் தகுதித் தேர்வு மூலமாகத்தான் நர்சுகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை தர வேண்டும் என்று நாங்கள் 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினோம். இப்போதுதான் தகுதித்தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு வேலை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி பயிலும் நர்சிங் மாணவிகள் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. தனியார் கல்லூரி நர்சிங் மாணவிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 15 மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம்என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x