Published : 13 Jan 2016 08:19 AM
Last Updated : 13 Jan 2016 08:19 AM
'ஜல்லிக்கட்டு நடப்பாண்டு கண்டிப்பாக நடக்கும்' என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
'நடப்பாண்டு பொங்கல் பண்டி கைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக் கும் விதத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த இடைக்காலத் தடை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் ஏமாற் றத்தை தந்துள்ளது.
நமது நாட்டின் பழமை, பண்பாடு, கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியும் தொன்மையான கலாசாரங்களுள் ஒன்றுதான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முழுமையாக அறிந்த பின்னர், மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ளும்.
நாளை (புதன்) டெல்லி செல்கி றேன். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதற்கான முயற்சி யில் ஈடுபடுவேன். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை என்ற செய்தி யைக் கேட்டு யாரும் தவறான முடிவுக்கு வர வேண்டாம். நம்பிக் கையோடு இருங்கள் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் முறையிட்டவர் களுக்கு, தமிழர்கள் பற்றியும் தெரியாது, தமிழ் கலாச்சாரம் பற்றியும் தெரியாது.
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி விட்டோம் என்று கூறுபவர்கள், நாளை முதல் இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்செல்லும் லாரி கள் முன் படுத்து தடை செய்வார் கள் என்றும், கசாப்பு கடைகள் முன்பு மறியல் செய்வார்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்குத் தடை வாங்குவார்கள் என்றும் நம்புகிறேன்.
கபடிப் போட்டியை ஒலிம்பிக் கில் சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். கபடியில் ஒரு மனிதனை பலர் சேர்ந்து பிடிக்க முயற்சிப்பார்கள். இதை வதை என்று கூற முடியுமா? கபடி எப்படி தமிழர்களின் விளையாட்டோ, அதேபோல்தான் ஜல்லிக்கட்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத் துக் கட்சிகளும் ஒரே குரலில் ஒலித்தது ஜல்லிக்கட்டு விஷயத் தில்தான். இதை யாரும் அரசிய லாக்க வேண்டாம். ஜல்லிக்கட்டு காளைகளைக் காளைகளாக அல்ல; தெய்வமாக நினைத்துத் தான் வளர்க்கிறார்கள். எங்காவது ஜல்லிக்கட்டு காளைகள் அடிமாட் டுக்காக சென்றுள்ளதா? ஜல்லிக் கட்டு போட்டியை நடத்த தமிழக அரசும் ஆக்கபூர்வமான நடவடிக் கையை மேற்கொள்ளும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT