Published : 24 Nov 2017 09:45 AM
Last Updated : 24 Nov 2017 09:45 AM

ஜெயா டிவியை மீட்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் செம்மலை விருப்பம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான எம்எல்ஏ செம்மலை, ‘தி இந்து’விடம் கூறியதாவது: பழனிசாமி- ஓபிஎஸ் ஆகியோர் இருப்பதுதான் உண்மையான அதிமுக.

டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு, ஜெயா டிவி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி அலுவலகங்கள், டெல்லி அலுவலகம் உட்பட அனைத்தும் கட்சியினரின் பங்களிப்புடன் உருவானது. இவை ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயரில் உள்ளன. அதனால் அவை பூங்குன்றனுக்கு சொந்தமாகி விடுமா?

மனங்கள் இணையாமல் இருந்ததற்கு இரட்டை இலை சின்னம் பிரச்சினை தான் காரணம். அதற்குத் தான் தலைமை காத்திருந்தது. இனி கட்சியின் பணிகள் வேகமாக நடக்கும். அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம்.

முதல்வரும் துணை முதல்வரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x