Published : 01 Jul 2023 07:18 AM
Last Updated : 01 Jul 2023 07:18 AM

ப்ரீமியம்
குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் - 2 | சொல்பேச்சு கேட்காத சிறார்: ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

சொல்பேச்சு கேட்காத சிறார் பற்றிக் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆராய்ச்சிகளின்படி, அறிவுரை கூறுதல், கவுன்சலிங், சிறார்நல வல்லுநர் ஒருவர் நேருக்குநேர் பேசி நடத்தையைச் சீர்படுத்துவது ஆகிய அணுகுமுறைகள் சொல்பேச்சு கேட்காத சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த உதவாது.

இம்மாதிரியான சிறார், பெற்றோர் சொல்வதை மட்டுமல்லாமல்; மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கூறும் அறிவுரைகளையும் ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டுவிடுவார்கள். பெரியவர்கள் கூறுவதை அமைதியாக எண்ணிப்பார்த்து அதை உள்வாங்கி நடந்துகொள்ளும் திறன் இவர்களுக்குக் குறைவாகவே காணப்படுகிறது; அதைக் கற்றுக்கொள்ளத் தேவையான பொறுமையும் இருக்காது. இவர்கள் நடத்தையைக் கட்டுப்படுத்த பெற்றோர் எடுக்கும் வழிமுறைகள் பலனளிக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இம்மாதிரியான சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த பெற்றோர் சில அடிப்படை உத்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், அவற்றைச் சீராகக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x