Last Updated : 09 May, 2023 06:12 AM

 

Published : 09 May 2023 06:12 AM
Last Updated : 09 May 2023 06:12 AM

ப்ரீமியம்
‘ஜென்டில்மேன்’ ஆகுங்கள்!

கிரிக்கெட் உலகின் கடந்த வார ஹாட் டாபிக் கவுதம் கம்பீர் - விராட் கோலியின் மோதல். முன்னாள், இந்நாள் வீரர்களின் இந்தச் செயல்பாடுகள், இந்தியாவையும் தாண்டி கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று, மக்களவை எம்.பி.யாகி, பயிற்சியாளர் நிலைக்கு வந்துவிட்ட கவுதம் கம்பீரும்; சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாகவும் தற்போது ஒரு மூத்த வீரராகவும் விளையாடிக்கொண்டிருக்கும் விராட் கோலியும் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் ‘ஜென்டில்மேன்’ விளையாட்டைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது!

தண்டனை போதுமா? - ஒரு விளையாட்டு என்றால் ஆக்ரோஷம், ஆர்ப்பரிப்பு, கோபா வேசம், வார்த்தைப் பரிமாற்றங்கள் எல்லாமே இருக்கும். களத்தில் இப்படிக் கலவையான உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு எந்த ஒரு வீரராலும் விளையாட முடியாது. அதுவும் பரபரப்பு, விறுவிறுப்பு, அதிரடிக்குப் பஞ்சமில்லாத டி20 போட்டிகளில் இந்த உணர்வுகளை நிச்சயம் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்த உணர்வுகள் எல்லாமே போட்டி முடிந்த பிறகே வெளிப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மைதானத்தில் நடந்த அந்த உரசல் விவாதமாகி இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x