Published : 23 Dec 2022 06:38 AM
Last Updated : 23 Dec 2022 06:38 AM

ப்ரீமியம்
டி.கே.ராமமூர்த்தி நூற்றாண்டு: மறக்க முடியாத மெல்லிசை மன்னர்!

ஐம்பதுகளின் முற்பாதி வரை தமிழ்த் திரையிசையில் கர்னாடக சங்கீதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. பெரும்பாலான பாடல்கள் நாடக மேடையிலிருந்து வந்த ஜனரஞ்சகமான மெட்டுக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தன. அதேசமயம் இந்திப் படப் பாடல்களின் மெட்டுக்களைத் தழுவி இசையமைக்குமாறு இசையமைப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இப்படியாக இரவல் மெட்டுக்களில் சிக்கிக்கொண்டு தமிழ்த் திரையிசை தத்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு விடிவெள்ளியாக சி.ஆர். சுப்பராமன் தோன்றினார்.

கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த இசை மேதை யினால் திரையிசைப் புத்துணர்ச்சி பெற்றது. அவரது பாசறையில் பட்டை தீட்டப்பட்டு திரைவானில் ஒளிவீசிய பல வைரச் சுடர்களில் ஒருவர்தான் நூற்றாண்டு காணும் மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி. இருவரில் இளையவர் எம்.எஸ்.விஸ்வநாதன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர், இசைப் பாரம்பரியத்தில் வந்தவர் டி.கே. ராமமூர்த்தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x