Last Updated : 18 Jan, 2024 06:25 AM

 

Published : 18 Jan 2024 06:25 AM
Last Updated : 18 Jan 2024 06:25 AM

ப்ரீமியம்
அதிசயங்கள் நிறைந்த புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில்

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரி நகரத்தில் அமைந்த ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தில்  ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள மூலவர் விக்கிரகங்கள் மரச் சிற்பங்களால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. ‘உத்கலம்’ என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது புரி நகரம். சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், இந்நகரத்துக்கு சிறப்பு சேர்க்கிறது.

தல வரலாறு: பாரதப் போர் நிறைவு பெற்ற பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யாதவர்களின் போக்கு பிடிக்காமல் தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேடன், மான் என்று நினைத்து அம்பு எய்தினான். அந்த அம்பு ஸ்ரீகிருஷ்ணரின் காலைத் தைத்தது. விபரம் அறிந்த வேடன் மனம் கலங்கினான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x