Published : 06 Sep 2015 12:53 PM
Last Updated : 06 Sep 2015 12:53 PM
பச்சையப்பன் கல்லூரி கால்பந்து அகாடமிக்கான வீரர்கள் தேர்வு முகாம் வரும் 12-ம் தேதி மாலை 4.30 மணி முதல் சென்னை பச்சையப் பன் கல்லூரியில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.
8 முதல் 13 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவுகளில் மொத்தம் 60 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ள னர். இது தொடர்பாக ஏரோஸ் கால்பந்து கிளப்பின் செயலாளர் தியாகராஜன் கூறுகையில், “தேர்வு முகாமின் மூலம் தேர்வு செய்யப் படும் வீரர்களுக்கு ஓர் ஆண்டு காலம் பயிற்சியளிக்கப்படும். வாரந் தோறும் 3 நாட்கள் மாலை வேளைகளில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT