Published : 24 Mar 2018 03:37 PM
Last Updated : 24 Mar 2018 03:37 PM

“உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உலகின் ‘அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ இன்னும் தயாராகவில்லை”

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும் ஜமைக்காவின் உசைன் போல்ட் ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்றாலும் தன் ஓட்டத்தை கால்பந்தாட்டத்தில் காட்ட முயற்சி செய்து வருகிறார்.

கிரிக்கெட் ஆட்டம் மீதும் உசைன் போல்ட்டுக்கு பெரிய ஆர்வம் உண்டு என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில் உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உசைன் போல்ட் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்று பொருஸ்ஸியா டார்ட்மண்ட் தலைமைப் பயிற்சியாளர் பீட்டர் ஸ்டோஜர் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்டத்துக்காக உசைன் போல்ட் பயிற்சி பெற்று வரும் உசைன் போல்ட் வயது தற்போது 31.

இந்நிலையில் பீட்டர் ஸ்டோஜர் கூறும்போது, “அது வழிமுறையையும் நகர்தலையும் பொறுத்தது, அனைத்தையும் விட அவர் உற்சாகமாக பயிற்சி செய்து வருகிறார், இது முக்கியம்.

அவர் திறமைசாலிதான், ஆனால் உயர்மட்ட கால்பந்து ஆட இன்னும் கொஞ்சம் அவர் பணியாற்ற வேண்டியுள்ளது.

ஓட்டப்பந்தயத்துக்கான அவரது உடற்கட்டு கால்பந்து என்று வரும்போது வேறுவகைப்பட்டதாகும். ஆனால் எங்களுடன் அவர் பயிற்சி செய்வது நல்ல உற்சாக மனநிலையை அளிக்கிறது, சிறந்த ஒரு கேளிக்கையாக உள்ளது.

அவரைப்போன்ற ஒருவருடன் விளையாடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x