Last Updated : 24 Feb, 2019 12:00 PM

 

Published : 24 Feb 2019 12:00 PM
Last Updated : 24 Feb 2019 12:00 PM

ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவில் 2 பொறியாளர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 2 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள பந்தர்கோட் பகுதியில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக் கும் பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த குர்மித் சிங், விஜய் குப்தா ஆகிய இரண்டு பொறி யாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அவர்கள் இருவரும் அங்கு பணியில் இருந்தபோது, எதிர்பாராதவித மாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவ லறிந்த போலீஸார், உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொறியாளர்கள் இருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x