Published : 22 Jun 2015 10:32 AM
Last Updated : 22 Jun 2015 10:32 AM

தன்னலம் கருதாத மனிதாபிமானி அவர்

தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் பற்றிய தகவல்கள் அருமை. உடல் நலமில்லாமல் இருந்த கக்கன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவரைப் பார்க்க, மருத்துவமனைக்கு வந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், கக்கன் கட்டில்கூட இல்லாமல் தரையில், பாயில் படுத்திருந்ததைக் கண்டு பதறிப்போய், ‘‘உங்களுக்கு நான் வேறு நல்ல வசதிகள் செய்துதருகிறேன்” என்று சொன்னார்.

அதற்கு, “என்னைப் போல் இங்கு 200 பேர் தரையில் படுத்திருக்கிறார்கள். எனக்கு மட்டும் வசதி கிடைத்துவிட்டால், அவர்கள் எல்லாம் எங்கே போவார்கள்?’’ என்று கேட்டார் கக்கன். தான் கஷ்டப்படும் நிலையிலும், மற்றவர்களின் நலனையே கருத்தில்கொண்ட மனிதாபிமானி அவர்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x