Published : 07 Sep 2023 06:13 AM
Last Updated : 07 Sep 2023 06:13 AM

ப்ரீமியம்
சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதே பிரச்சினைகளைக் களையும்! - மருத்துவர் கஃபீல் கான் நேர்காணல்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி.) அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவு மருத்துவராகவும், குழந்தைகள் மருத்துவத் துறையின் விரிவுரையாளராகவும் பணிபுரிந்துவந்தார் மருத்துவர் கஃபீல் கான். அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 2017 ஆகஸ்ட் மாதம் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கும் தனியார் நிறுவனத்துக்குப் பணம் செலுத்தாததால் பற்றாக்குறை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், உத்தரப் பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என்பதை மறுத்தது. அத்துடன் கஃபீல் கானின் கவனக்குறைவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்டி, பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டத்தில் கஃபீல் கான் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் சார்ந்து, இரண்டு முறை அவரை உத்தரப் பிரதேச காவல் துறை கைதுசெய்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x