Published : 30 Dec 2015 07:38 AM
Last Updated : 30 Dec 2015 07:38 AM
பிஹாரில் விஐபிக்களின் வாகனங் களில் சைரன் பயன்படுத்தக்கூடாது என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு, ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் 15 ஆண்டுகள் பழ மையான டீசல் வாகனங்களுக்கு அண்மையில் தடை விதிக்கப் பட்டது.
இந்நிலையில் மாநில உள்துறை அமைச்சக ஆய்வுக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் கூறிய தாவது:
மாநில ஆளுநர், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்பு லன்ஸ் வாகனங்கள் தவிர்த்து இதர விஐபிக்கள் தங்கள் வாகனங் களில் ‘சைரன்’ பயன்படுத்தக் கூடாது. ஒலி மாசுவைக் கட்டுப் படுத்த இந்த நடைமுறையை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல் படுத்தவேண்டும்.
சிறைகளில் கைதிகளின் நடமாட் டத்தையும் செயல்பாடுகளையும் சிறைத்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும், கைதிகள் யாரெல்லாம் சந்திக்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்படு கின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குறுகிய தெருக்களில் தீ விபத்துகள் நேரிடும்போது தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. எனவே இருசக்கர வாகனங்களில் தீய ணைப்பு கருவிகளைப் பொருத்தி பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT