Published : 08 Jun 2018 08:24 AM
Last Updated : 08 Jun 2018 08:24 AM

நக்சல்களுடனான என்கவுன்ட்டர்: ஜார்க்கண்டில் சிஆர்பிஎப் வீரர், போலீஸ் அதிகாரி பலி

ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸாவன் மாவட்டத்தில் உள்ள தல்பாஹா வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிஆர்பிஎப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், 50-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் அந்தப் பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் போலீஸார் சிலரும் சென்றிருந்தனர்.

இந்நிலையில், சிஆர்பிஎப் வீரர்கள் தங்களை நெருங்குவதைக் கண்ட நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில், சிஆர்பிஎப் படையின் 'கோப்ரா' பிரிவைச் உத்பல் ராபா (27) மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் உயிரிழந்தனர். பலியான உத்பல் ராபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x