Last Updated : 31 May, 2018 03:22 PM

 

Published : 31 May 2018 03:22 PM
Last Updated : 31 May 2018 03:22 PM

பீகாரில் லாலு கட்சி அமோக வெற்றி; பாஜக-நிதிஷ் கூட்டணி தோற்றது: சந்தர்ப்பவாதம் வீழ்ந்தது-தேஜஸ்வி

பீகாரில், ஜோகிஹத் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

லாலுவின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி, சந்தர்ப்பவாதம் தோற்றது என்று லாலுவின் மகன் தேஜஸ்வி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம், ஆராரியா மாவட்டத்தில் ஜோகிஹத் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஷான்நவாஸ் ஆலம் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். முஸ்லிம் மக்கள் மிகுந்த இந்தத் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இதனால், அதிருப்தி அடைந்த ஷர்பிராஸ் ஆலம் நிதிஷ்கட்சியில் இருந்து விலகி, தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், இந்தத் தொகுதி காலியாக இருந்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த ஷர்பிராஸ் ஆலம், ஆராரியா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த தனது தந்தை இறந்ததால், அந்த இடத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ஜோகிஹத் தொகுதி இடைத் தேர்தலில் ஷர்பிராஸின் சகோதரர் ஷாநவாஸை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி களமிறக்கியது.

இந்த சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ஷாநவாஸ் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்தது. கடந்த திங்கள் கிழமை வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆர்ஜேடி வேட்பாளர் ஷாவாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதாக துணைத் தேர்தல் அதிகாரி பைஜு நாத் குமார் தெரிவித்தார்.

ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

இந்தவெற்றி குறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நாங்கள் பெற்ற வெற்றியின் வித்தியாசத்தைக் காட்டிலும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வேட்பாளர் மிகக்குறைவாகப் பெற்றுள்ளார்.நிதிஷ் குமாருக்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். பணத்தையும், அதிகாரத்தையும்யன்படுத்தி, வெற்றி பெறலாம் என என் மாமா நிதிஷ் நினைத்துவிட்டார். இந்த வெற்றி லாலுவின் கொள்கைகளுக்கு கிடைத்தது. சந்தர்ப்பவாதம் தோற்றது எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x