Published : 03 May 2024 07:24 AM
Last Updated : 03 May 2024 07:24 AM

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்தன. தற்போது சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியா தனக்கு ஜாமீன் வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கடந்த மாதம் 30-ம் தேதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் மனுதாரர் எம்எல்ஏ என்பதால், இந்த ஜாமீன் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு வெள்ளிக்கிழமை (இன்று) விசாரிக்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x