Last Updated : 17 Feb, 2018 05:21 PM

 

Published : 17 Feb 2018 05:21 PM
Last Updated : 17 Feb 2018 05:21 PM

நாக்பூரில் திருநங்கைகளுக்கென தனியே பொதுக் கழிப்பிடங்கள்: மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்

நாக்பூரில் திருநங்கைகளுக்னெ தனியே கழிப்பிடங்கள் கட்டித்தருவதென மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

திருநங்கைகளுக்காக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சார்தி ட்ரஸ்டியின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் சச்சின் கர்வ்வைச் சந்தித்து திருநங்கைகளுக்கென தனியே கழிப்பறைகள் வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து சாரதி டிரஸ்ட்டின் தலைமை நிர்வாகி நிகுன்ஞ் கூறுகையில், ''நாங்கள் திருநங்கைகளுக்கென நாக்பூரில், பச்பாவோலி மற்றும் சிதாபுல்டி ஆகிய பகுதிகளில் 2 பொதுக் கழிப்பறைகள் கட்டுவதென முடிவெடுத்தோம். இந்த இடம் சார்தி டிரஸ்ட் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாக்பூரில் மட்டும் 1,200 திருநங்கைகள் வசிக்கின்றனர். கலெக்டரிடமும், அரசு மருத்துவமனை டீன்கள் மற்றும் தலைமை மருத்துவர்களிடமும் திருநங்கைகள் பொது இடங்களில் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை எடுத்துக் கூறினோம்.

திருநங்கைகளுக்கு என்று தனியே பொதுக் கழிப்பிடங்களும் அதைப்போலவே திருநங்கைகளுக்கு என்று தனியே மெடிக்கல் வார்டுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டோம்.''

இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைவில் நாக்பூரில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு பொதுக் கழிப்பிடங்கள் தனியே கட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x