Published : 09 May 2024 06:20 AM
Last Updated : 09 May 2024 06:20 AM

சென்னை விமான நிலையத்தில் 2023-24-ல் மட்டும் ரூ.248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2023-24-ம் ஆண்டில் ரூ.248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சென்னையில் இருந்து ஐககிய அரபுஅமீரகம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சிகள் அதிகமாக கடத்தப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அரிய வகை உயிரினங்கள்: வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அரிய வகை உயிரினங்களை, மத்திய வன குற்றப்பிரிவு அலுவலர்கள் உதவியுடன், அந்த வன உயிரினங்களை, எந்த நாட்டில் இருந்து வந்ததோ, அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரையில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையால் ரூ.248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம், ரூ.192 கோடி மதிப்புள்ள 42.68 கிலோ போதைப் பொருட்கள், ரூ.19.44 கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 150-க்கும் மேற்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x