Published : 25 Feb 2024 06:43 AM
Last Updated : 25 Feb 2024 06:43 AM

ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் காரைக்குடி நிதி நிறுவன இயக்குநர் கைது

சிவகங்கை: காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் (மகிழ்ச்சி) நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பணம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி காரைக்குடி, காளையார்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த நிதி நிறு வனத்தில் ரூ.60 கோடி வரை முதலீடு செய்திருந்தனர்.

ஆனால் அந்நிறுவனம் முதிர்வுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர் மீது சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இதில் 7 பேரை ஏற்கெனவே கைது செய்த நிலையில், அந்நிறுவன இயக்குநர் ஈரோடு சூரம்பட்டி சிவக்குமார் (46) தலைமறைவாக இருந்தார். அவரை பொரு ளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x