Published : 16 Aug 2017 11:40 AM
Last Updated : 16 Aug 2017 11:40 AM
கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்க புதிய படமொன்று உருவாகவுள்ளது. இதனை அரசியல் நையாண்டி படமாக உருவாக்க கரு.பழனியப்பன் திட்டமிட்டுள்ளார்.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து பலரும் தொலைக்காட்சி கலந்துரையாடலில் விவாதித்து வருகிறார்கள். இதில் கரு.பழனியப்பனின் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது மீண்டும் இயக்குநர் பொறுப்புக்கு திரும்பியுள்ளார் கரு.பழனியப்பன். இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
முன்பாக மு.மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அருள்நிதி. இதனையும் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT